தமிழ் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்.
1. முதல் எழுத்துக்கள்
2. சார்பு எழுத்துக்கள்
"அம்மா" இச் சொல்லை அவதானியுங்கள். இதில் உள்ள மூன்று எழுத்துக்களும் பின்வருமாறு அமைந்துள்ளன.
அ - உயிர் எழுத்து
ம்- மெய் எழுத்து
மா- உயிர் மெய் எழுத்து
1. முதல் எழுத்துக்கள்- 30
உயிர் எழுத்து - 12
மெய் எழுத்து- 18
உயிர் எழுத்துக்கள் - 12
"அ" தொடங்கி "ஔ" வரையுள்ள பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் ஆகும்.
*அ ஆ இ ஈ உ ஊ ஊ ஏ ஐ ஒ ஓ ஔ*
இவ் எழுத்துக்கள் உயிர் போல ஏனைய எழுத்துக்களை இயக்குவதால் "உயிர் எழுத்துக்கள்" எனப்படுகின்றன.
மெய் எழுத்துக்கள்- 18
"க்" தொடக்கம் "ன்" வரையுள்ள பதினெட்டு எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.
* க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் *
இவ்விஷயத்தில் உயிருக்கு உடல் போல இருப்பதால் "மெய் எழுத்துக்கள்" எனப்படுகின்றன.
No comments:
Post a Comment